ஆளுமை:தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தில்லை நடராஜா
தந்தை சிங்காரநாதபிள்ளை
தாய் இராசம்மா
பிறப்பு 1947
ஊர் உடுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை (1947 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறியாளர், சமூகப்பற்றாளர். இவரது தந்தை சிங்காரநாதபிள்ளை; இவரது தாய் இராசம்மா. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர், வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்துக் கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் உடுவை தில்லை நடராஜா என்னும் புனைபெயரில் சிறுகதைகள், சிறுவர் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 412-414
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 83-86
  • நூலக எண்: 2029 பக்கங்கள் 23-25