ஆளுமை:தியாகராசபிள்ளை, சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தியாகராசபிள்ளை
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு
ஊர் கரம்பன்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராசபிள்ளை, சோமசுந்தரம் வேலணை, கரம்பனைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் புலவர், ஆசிரியர், கிராம அதிகாரி. இவரது தந்தை சோமசுந்தரம். வடமொழி அறிவு கொண்ட இவர், இளமைக் காலத்தில் பல நவயுகப் பாடல்களை யாத்துள்ளார்.

இவரது பாடல்கள் ஈழகேசரி, கலைமகள், சிவாஜி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் சுந்தரர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை வெளியிட்டதோடு 'குமார சம்பவம்' என்னும் வடமொழிக் காவியத்தைச் செய்யுள் வடிவில் மொழிமாற்றம் செய்துள்ளார். இவரது 'சோலைக்குயில்' என்ற கவிதை நூல் பலரது பாராட்டையும் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 14-15