ஆளுமை:திசைநாயகம், முருகேசர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திசைநாயகம்
தந்தை முருகேசர்
பிறப்பு 1857
ஊர் காரைநகர்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திசைநாயகம், முருகேசர் (1857 - ) காரைநகர், தங்கோடையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். இவரது தந்தை முருகேசர். பிரக்கிராசி காசிப்பிள்ளை என்று அழைக்கப்பட்டு வந்த இவர், கொழும்பு றோயல் அக்கடமியில் கல்வி கற்று வந்த போது கோகலே மாணவர் உதவிப்பரிசைப் பெற்றார். அதன் பின்பு சட்டக்கல்லூரியில் கற்று வழக்கறிஞரானார். இவர் சட்டத்துறையில் தேறி திரு டொன்ஹோல்றிடம் நியாய நூல் சம்பந்தமாகப் பயிற்சி பெற்றுப் பின் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞரானார்.

இவர் ஆசிய அறிவியல் வளர்ச்சிக் கழகம், வரலாற்றுக் கழகம் ஆகிய இரு சபைகளிலும் அங்கத்துவம் பெற்றதுடன் தர்க்கம், இலக்கியம், சரித்திரம், வானசாஸ்திரம் ஆகியவற்றில் நிபுணராயும் அவை சார்ந்த பல சங்கங்களில் அங்கத்தவராயும் இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 299-301