ஆளுமை:தாமரைச்செல்வி, ஞானகுமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாமரைச்செல்வி
தந்தை செல்லத்தம்பி
தாய் தவமணிதேவி
பிறப்பு
ஊர் ஆரையூர்
வகை எழுத்தாளர்;
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாமரைச்செல்வி, ஞானகுமார் (1978.03.11) மட்டக்களப்பு ஆரையூரில் பிறந்த எழுத்தாளர் தற்பொழுது ஜேர்மனியில் வசித்து வருகிறார். இவரது தந்தை செல்வத்தம்பி; தாய் தவமணிதேவி ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் கல்வி கற்றார். வெளிவாரி கலைப்பட்டதாரியான இவர் உளவியல் டிப்ளோமா முடித்துள்ளார்.

கவிதை, ஓவியம், நாடகம், பாட்டு, கிராமிய நடனம், கைப்பணிக்கலைகள், அறிவிப்பு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். தினமுரசு பத்திரிகையின் நான்கு வரிக் கவிதை ஒன்றின் மூலம் கவிதைத் துறைக்குள் பிரவேசித்துள்ளார். விற்பனைக்கு ஒரு கற்பனை எனும் கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

வெளி இணைப்புக்கள்

குறிப்பு : மேற்படி பதிவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்.