ஆளுமை:ஞானப்பிரகாசர், சுவாமிநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானப்பிரகாசர்
தந்தை சுவாமிநாதபிள்ளை
தாய் தங்கமுத்து
பிறப்பு 1875
இறப்பு 1947
ஊர் மானிப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானப்பிரகாசர், சுவாமிநாதபிள்ளை (1875 - 1947) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுவாமிநாதபிள்ளை; இவரது தாய் தங்கமுத்து. இவருக்குப் பாடசாலைக் கல்வி முடிவுற்றதும் அரசாங்கப் புகைவண்டித் திணைக்களத்தில் உத்தியோகம் கிடைத்தது. இவர் 1901 ஆம் ஆண்டு கிறிஸ்தவப் போதகராகி வண சுவாமி ஞானப்பிரகாசர் எனப் பெயர் சூட்டப்பெற்றார்.

இவர் ஏறக்குறைய இருபது மொழிகளைப் பயின்றதுடன் தமிழ் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி, ஆண்டவர் சரித்திரம், கத்தோலிக்கத் திருச்சபையும் அதன் போதகங்களும், கிறிஸ்துநாதர் சரித்திர ஆராய்ச்சி, தமிழ் அமைப்புற்ற வரலாறு, தருக்க சாத்திர சுருக்கம், தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், திருச்சபைச் சரித்திரம், துறவி ஞானம், தேவ ஆராதனை முறை, போர்த்துகீசர் ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணச் சரிதை, யாழ்ப்பாணச் சரித்திர ஆராய்ச்சி போன்ற நூல்களை இயற்றினார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 145-146
  • நூலக எண்: 209 பக்கங்கள் 68-69
  • நூலக எண்: 350 பக்கங்கள் 114-121
  • நூலக எண்: 789 பக்கங்கள் 05-10
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 152-181
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 01-05
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 130-141
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 70-71