ஆளுமை:ஜெகதீசன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெகதீசன்
தந்தை சுப்பிரமணியம்
தாய் ஞானேஸ்வரி
பிறப்பு 1948.02.14
இறப்பு -
ஊர் இளவாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெகதீசன், சுப்பிரமணியம் (1948.02.14) யாழ்ப்பாணம், இளவாலையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் ஞானேஸ்வரி. இவர் 1990 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். இவர் புனித என்றியரசர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு அலெக்ஸாண்டிரா கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பயின்றார். மேலும் இலண்டன் கணக்கியல் கல்லூரி, இலண்டன் பத்திரிகைத்துறை கலாசாலை போன்ற இடங்களிலும் பயின்றார். கனடாவில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

இளவாலை எஸ்.ஜெகதீசன்,பொதிகை எஸ்.ஜெகதீசன்,பாஞ்சாலன் போன்ற பல புனை பெயர்களில் அறியப்படும் இவர் யாழ் ஈழநாட்டில் உதவி ஆசிரியராகவும், யாழ் சஞ்சீவி,லண்டனில் லண்டன் முரசு ஆகியவற்றில் இணை ஆசிரியராகவும், நோர்வேயில் கதிரவன், கனடாவில் பொதிகை ஆகியவற்றின் ஆசிரியராகவும் திகழ்ந்தவராவார். ஈழநாடு (ரஞ்சன்), ஈழநாடு (பரமேஸ்), ஈழகேசரி, ரோஜா, சுடரொளி, தமிழர் தகவல் ஆகிய இதழ்களிலும், கீதவாணி, கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் போன்ற காற்றலை ஊடகங்களிலும் இவரது ஆக்கங்கள் வந்துள்ளன. 1979ஆம் ஆண்டு 'அர்த்தங்கள் ஆயிரம்' என்ற பெயரில் இவர் சந்தித்த பிரமுகர்களின் பேட்டிக் கட்டுரைகளும், 1980ஆம் ஆண்டு 'பிராயச்சித்தம்' என்ற பெயரில் 10 சிறுகதைகளும், 1993ஆம் ஆண்டு 'கவிநாயகர் கந்தவனம்' என்ற நூலையும் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 36044 பக்கங்கள் 87-88