ஆளுமை:சோமசுந்தர தேசிகர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தர தேசிகர்
பிறப்பு 1985.08.11
ஊர் வீரமுனை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தர தேசிகர் (1985.08.11- ) கிழக்கு மாகாணத்தின் வீரமுனையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றதோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 118