ஆளுமை:சோமசுந்தரப் புலவர், கதிர்காமர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரப் புலவர்
தந்தை கதிர்காமர்
தாய் இலக்குமியம்மை
பிறப்பு 1876.06.28
இறப்பு 1953.07.10
ஊர் நவாலி
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரப் புலவர், கதிர்காமர் (1876.06.28 - 1953.07.10) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை கதிர்காமர்; தாய் இலக்குமியம்மை. இவர் தங்கத் தாத்தா என அறியப்பட்டார். இவர் ஆரம்பக் கல்வியை நவாலி அருணாசலம், கந்தநயினார் தம்பையா ஆகியோரிடமும் ஆங்கிலக்கல்வியை மானிப்பாய் மாரிமுத்து ஆசிரியரிடமும் பயின்றார். இவர் இளமையில் 'சைவ வாலிபர் சங்கம்' அமைத்துச் செயற்படுத்தி வந்ததோடு சமய பாடங்களைக் கற்பித்தும் வந்தார். 1899 ஆம் ஆண்டு சித்தங்கேணியில் சின்னத்துரையுன் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரை ஆசிரியப் பணியாற்றினார்.

இவர் தமது பதினெட்டாவது வயதில் முறையான செய்யுள்களை ஆக்கத்தொடங்கியதுடன் அட்டகிரிப் பதிகம், அட்டகிரிக் கலம்பகம், கதிர்காமவேலவர் பதிகம், கதிரைச்சிலேடை வெண்பா, நல்லையந்தாதி, நல்லூர் முருகன் திருப்புகழ், மாவிட்டபுரம் முருகன் பதிகம், மானிப்பாய் விநாயகர் பாமாலை, நாமகள் புகழ்மாலை ஆகிய பிரபந்தங்களையும் சுகாதாரக் கும்மி என்ற நல்வழி நூலையும் ஏராளமான சிறுவர் பாடல்களையும் சாவித்திரிகதை, கந்தபுராண கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற்கருத்தும் ஆகிய உரைநடை நூல்களையும் 1925 ஆம் ஆண்டில் 'உயிரிளங்குமரன்' என்னும் நாடகத்தினையும் பனையின் வரலாறும் பயனும் பற்றித் 'தால விலாசம்' என்னும் நூலினையும் ஆக்கியளித்துள்ளார்.

1910 ஆம் ஆண்டு 'சைவபாலிய சம்போதினி' என்ற சைவ சித்தாந்தக் கருத்துக்களைக்கொண்ட மாத வெளியீட்டினை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாக நடாத்தினார். இவர் எழுதிய உயிரிளங்குமரன் என்ற நாடகம் 1927 ஆம் ஆண்டு அட்டகிரி கந்தசுவாமி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்ட போது இவரின் புலமையைப் பாராட்டி மகா வித்துவான் ஆறுமுகம்பிள்ளை, உடையார் மயில்வாகனன், முதலியார் இராசநாயகம் முதலிய சான்றோர்களால் 'புலவர்' என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 350 பக்கங்கள் 122-131
  • நூலக எண்: 10225 பக்கங்கள் 15-18
  • நூலக எண்: 963 பக்கங்கள் 143
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 183-197
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 144-157
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 57-58
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 90-93