ஆளுமை:செல்வசிங்கம், நாகமணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வசிங்கம்
தந்தை நாகமணி
பிறப்பு 1957.03.24
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வசிங்கம், நாகமணி (1957.03.24 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நாகமணி. இவர் க. பொ. த சாதாரண தரம் வரை கல்வி பயின்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊழியராகப் பணி புரிந்தார். இவர் இசை, ஓவியம், சிற்பம் போன்ற கலைத் துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் உட்படப் பல இடங்களில் ஓவியங்களை வரைந்துள்ளார். அரியாலை சனசமூக நிலையம், சங்கிலியன் சனசமூக நிலையம் முதலான இடங்களில் இசைநிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளதோடு போட்டி நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 67