ஆளுமை:சுப்பு ஐயர், கதிரேசையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பு ஐயர்
தந்தை கதிரேசையர்
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு
ஊர் மானிப்பாய்
வகை சோதிடர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பு ஐயர், கதிரேசையர் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர், சோதிடர். இவரது தந்தை கதிரேசையர்; தாய் அன்னப்பிள்ளை. இவர் தம்பையர் எனவும் அழைக்கப்பட்டார். தமிழிலக்கண இலக்கியங்களை நவாலி கா. தம்பையாவிடம் முறையே பயின்றார்.

புராண இதிகாசங்களுக்குப் பொருள் கூறுவதிலும் சோதிடத்திலும் புலமை பெற்று விளங்கிய இவரிடம் ஆணல் சதாசிவம் பிள்ளை சமஸ்கிருதத்தையும் கந்தபுராணம், காரிகை ஆகிய நூல்களையும் பயின்றார் எனக் கூறப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 127