ஆளுமை:சிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராமலிங்கம்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1925.09.16
இறப்பு 2005.08.25
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1925.09.16 - 2005.08.25) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கவிஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். 1946 ஆம் ஆண்டு சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். 1943 ஆம் ஆண்டிலிருந்து நாற்பது வருடங்கள் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும் உப அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் அகில இலங்கைச் சேக்கிழார் மன்ற ஸ்தாபகராகவும் ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து இந்திய அறிஞர்களை அழைத்து யாழ். இந்துக் கல்லூரியில் சேக்கிழார் விழாவை நடத்தினார். 1980 ஆம் ஆண்டில் அகில இலங்கைக் கம்பன் கழகத்தை ஸ்தாபித்து அதன் காப்பாளராக இருந்து வழிநடத்தினார்.

இலண்டனில் வாழும் இவரது மாணவர்கள் 2006 ஆம் ஆண்டு இவரது நினைவாகச் சிறப்புமலர் ஒன்றை வெளியிட்டனர். தர்மபுரம் ஆதீனம் 1970களில் இவரைக் கௌரவித்து விருது வழங்கியது. அகில இலங்கைக் கம்பன் கழகம் இவருக்குக் 'கம்ப காவலர்' என்ற விருதை வழங்கிக் கெளரவித்தது. அத்தோடு யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் இவரை லண்டனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினர். 2005 ஆம் ஆண்டில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை 'மூத்த ஆசிரியப் பெருந்தகை' என்ற பட்டத்தை வழங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 177-179
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 91