ஆளுமை:சிவஞானசுந்தரம், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவஞானசுந்தரம்
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1928.03.30
இறப்பு 2005.06.04
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஞானசுந்தரம், செல்லத்துரை (1928.03.30 - 2005.06.04) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு வைத்தியக் கல்லூரி, இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவக் கல்வி கற்றுத் தேறியதுடன் வி.செ.சி.பெனிசிலின், மகன், ஜெய்ஹிந்தசாஸ்திரி, நந்தி ஆகிய புனைபெயர்களில் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி பெரும் சாதனைகளைப் படைத்தார்.

இவரதுசஞ்சலமும் சந்தோஷமும் என்ற முதலாவது சிறுகதை வீரகேசரியில் வெளியானது. இவர் மலையக மக்களின் வாழ்க்கை அவலங்களை மையமாகக் கொண்டு எழுதிய மலைக்கொழுந்து நாவல் 1964 ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசுப் பெற்றது. இவர் அருமைத்தங்கைக்கு, அன்புள்ள நந்தினி (மருத்துவ அறிவுரை), ஊர் நம்புமா, கண்களுக்கு அப்பால் (சிறுகதைத் தொகுப்பு), உங்களைப் பற்றி (சிறுவர் அறிவுரை), குரங்குகள் (நாடகம்), தங்கச்சியம்மா (நாவல்), நம்பிக்கைகள் (நூல்) ஆகியவற்றை எழுதியுள்ளார். இவருக்கு நந்தி என்னும் பட்டப்பெயரை இந்திய அரசியல் வாதியும் எழுத்தாளருமான இராஜாஜி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 144-145
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 40
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 52-53
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 140-151
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 88-92
  • நூலக எண்: 394 பக்கங்கள் 47
  • நூலக எண்: 2075 பக்கங்கள் 24-26