ஆளுமை:சிவசிதம்பரம், நற்குணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசிதம்பரம்
தந்தை நற்குணம்
பிறப்பு 1955.07.13
ஊர் 3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசிதம்பரம், நற்குணம் (1955.07.13) 3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நற்குணம்; என்.சிவாஸ் என்ற புனைபெயரில் அறியப்படுகிறார்.

பாடசாலைக் காலத்தில் விளையாட்டுத்துறையிலும் கலைத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். முல்லைமணி அவர்களின் நெறியாள்கையில் முதலாவது நாடகமாக அறம் உரைக்க தம்பி என்னும் சரித்திர நாடகத்தில் கலைத்துறைக்குள் பிரவேசித்த இவர் நாட்டுக்கூத்தில் காக்கை வன்னியனாகவும் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

என்.சிவதாஸ் என்ற புனைபெயருடன் பல சமூக சீர்திருத்த நாடகங்களை தனது படைப்பாக வழங்கியுள்ளார். சுமார் 20 நாடங்கள் வரை நடித்துள்ளார்.