ஆளுமை:கெங்காதரன், லெட்சுமண ஆச்சாரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கெங்காதரன்
தந்தை லெட்சுமண ஆச்சாரி
பிறப்பு 1944.02.18
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கெங்காதரன், லெட்சுமண ஆச்சாரி (1944.02.18 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை லெட்சுமண ஆச்சாரி. இவர் தனது 10 ஆவது வயதிலிருந்து வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆகிய விக்கிரகங்களையும் தேர், தேவாலய பூசைப் பொருட்கள், நினைவுக் கேடயம், வெற்றிக் கிண்ணங்கள், கலசம் ஆகியவற்றையும் வடிவமைத்துள்ளார். 45 வருடங்களிற்கு மேலாக உலோகத் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வரும் இவர், யாழ்ப்பாணப் பிரதேச கலாச்சாரப் பேரவையின் யாழ் ரத்னா விருதைப் பெற்றுள்ளதோடு 2007 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 241