ஆளுமை:குழந்தைவேல், இராமன் செல்லப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குழந்தைவேல்
தந்தை இராமன் செல்லப்பா
தாய் -
பிறப்பு 1953.01.23
ஊர் வேரவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லப்பா-குழந்தைவேல் வேரவிலில் பிறந்தார்.(1953.01.23) கிளி/வேரவில் இந்து அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 8 வரையும், கிளி/ பூநகரி மகா வித்தியாலயத்தில் எஸ்.எஸ்.சி வரையும் கல்வி பயின்றார். இவரது தந்தையார் நாட்டுக்கூத்துக்களை நடித்துள்ளார். ஆரம்பத்தில் 13 வயதில் பாடசாலை நிகழ்வுகளில் நாடகங்களை நடிக்க ஆரம்பித்தார். இவர் கந்தையா சிவலிங்கம் எனும் அண்ணாவியாரிடமும் ,வேலன் ஆகியோரிடம் இக்கலையைப் பயின்றார். ”ஐயோ ராசாவே” என்ற நகைச்சுவை நாடகத்தில் அரசனாக நடித்துள்ளார். அத்துடன் ”திருவள்ளுவர்”, ”வெளிநாட்டு மாப்பிள்ளை”, ”தேர்தல் முடிவுகள்”,”சத்தியவான் சாவித்திரி”, ”காத்தவராயன் கூத்து” உட்பட 34 இற்கும் மேற்பட்ட நாடகங்களையும் நடித்துள்ளார். பெண் பாத்திரங்களிலேயே அதிகம் நடித்துள்ளார். அத்துடன் அரச நாடகங்களில் அரசனாக நடித்துள்ளார். 1974 ஆம் ஆண்டில் திருமணம் முடித்தார். பூநகரி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் முகாமையாளராக 10 வருடங்கள் கடமையாற்றினார். கிராம அபிவிருத்திச் சங்கத்தில் 1980ஆம் ஆண்டு முதல் 2013 வரை தலைவராகவும், கமக்காரர் அமைப்பில் 1990 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தலைவராகவும், சனசமூக நிலையத்தில்1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை தலைவராகவும் ,உற்பத்தியாளர் சங்கம், கிராமிய போதை ஒழிப்புக்குழு தலைவராகவும், சிறுவர் பாதுகாப்புக் குழுத் தலைவராகவும், சிக்கனக் கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் , காணி அபகரிக்கப்பட்டோர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் உறுப்பினராகவும், பெரியசிவன் ஆலயம், ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களின் தலைவராகவும் , வெள்ளைப் பள்ளத்துப் பிள்ளையார் ஆலயத்தின் செயலாளராகவும் இருக்கிறார். பூநகரி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட ”கலைநகரி” விருது பெற்றுள்ளார்.