ஆளுமை:குணேஸ்வரன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணேஸ்வரன்
தந்தை சுப்பிரமணியம்
தாய் கமலாதேவி
பிறப்பு 1971.08.25
ஊர் தொண்டைமானாறு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


குணேஸ்வரன், சுப்பிரமணியம் (1971.08.25- ) யாழ்ப்பாணம் தொண்டைமனாற்றைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; இவரது தாய் கமலாதேவி. இவர் துவாரகன் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தையும் பெற்று யாழ்ப்பாணம் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவரது படைப்புக்களாக மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் (கவிதை) அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்) புனைவும் புதிதும் (ஆய்வு கட்டுரைகள்) அம்மா, வெளிநாட்டுக் கதைகள், கிராமத்து வாசம், பாட்டிமார் கதைகள், கதை கதையாம் (தொகுப்பு நூல்கள்) காணப்படுகின்றன.

இவர் மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் கவிதைக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான வடமாகாண இலக்கிய விருதையும் அதே ஆண்டில் இலங்கை இலக்கியப் பேரவையால் வழங்கப்படும் கவிஞர் ஐயாத்துரை விருதையும் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4696 பக்கங்கள் 32