ஆளுமை:குகதாசன், இராசையா
பெயர் | குகதாசன் |
பிறப்பு | 1953.11.20 |
ஊர் | நாயன்மார்கட்டு |
வகை | கவிஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குகதாசன், இராசையா (1953.11.20 - ) யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர், ஆன்மீகவாதி, சமூக சேவையாளர். இவரது தந்தை பெயர் இராசையா. இவர் யாழ். நாயன்மார்க்கட்டு மகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் யாழ். மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார்.
இவர் இலங்கை அரசாங்க நீதி அமைச்சினால் சமாதான நீதவானாகவும் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் உபதலைவராகவும் திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தின் சமய திட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். முருகேசன், தாசன் என்ற புனைபெயர்களில் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகளில் இவரது கவிதைகள், கீர்த்தனைகள், பாடல்கள் வெளியாகின. இவர் இருபத்துமூன்று ஆலயங்களுக்குத் திருவூஞ்சற் பாமாலை பாடிய போதும் புத்தக வடிவில் வெளியானவை பதினாறு ஆகும். இவர் சிவாலயங்களில் பூசைகளில் சிவத்தமிழ் பேதங்கள், அபரக் கிரியையில் ஒரு நோக்கு கட்டுரைகளையும் “வாழ்வில் வளம் தரும் வண்டமிழ் வேதங்கள்” என்னும் பெருந்தொகுப்பு நூலினையும் எழுதியுள்ளார்.
இவர் கல்வெட்டுக்கள் எழுதுவதோடு காலத்துக்குக் காலம் “திருமுறைத் தேனமுது” ஒலிப் பேழைகளையும் குறுந்தட்டுகளையும் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக நிறுவனங்கள், பெரியார்களின் விழாக்களுக்குக் கவிதையும் எழுதிவருகின்றார். இவர் நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலயத்திற்கு 'மகா ஆசீர்வாதம்' தமிழில் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 30