ஆளுமை:கிருஷ்ணாழ்வார், வீரகத்தி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணாழ்வார்
தந்தை வீரகத்தி
தாய் இலக்குமி
பிறப்பு 1895
இறப்பு 1967
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணாழ்வார், வீரகத்தி (1895 -1967 ) யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர், நடிகர். இவரது தந்தை வீரகத்தி; தாய் இலக்குமி. இவர் கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 08 வரை கல்வி கற்றார். இவர் முதல் முதலாகத் தனது ஆறாவது வயதில் சுபத்திரா கல்யாணம் நாடகத்தில் சுபத்திரை வேடம் ஏற்று நடித்தமையால் சுபத்திரை ஆழ்வார் என அழைப்படலானார். இவர் அரிச்சந்திரன் நாடகத்தில் சந்திரமதியாகவும் ஞானசவுந்தரியாகவும் ராஜபாட் வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். இவர் ஆசுகவியாகப் பாடல்களை ஆக்கவல்லவர். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்தமையால் "கிருஷ்ணாழ்வார்" எனவும் அழைக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 54-57
  • நூலக எண்: 11851 பக்கங்கள் 29-30
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 350