ஆளுமை:கந்தையா, பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையா
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு 1914.07.01
இறப்பு 1960.09.08
ஊர் கரவெட்டி
வகை அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, பொன்னம்பலம் (1914.07.01 - 1960.09.08) யாழ்ப்பாணம், வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த அரசியல்வாதி, ஆசிரியர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் கல்வி கற்றார். புலமைப் பரிசில் பெற்ற கந்தையா கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொழிற்பட்டு கட்சி உறுப்பினர் ஆனார்.

இரண்டாம் உலகப் போர் மூண்டதும் இவர் இலங்கைக்குத் திரும்பி, காலதாமதமின்றிப் பழைய மாணவ நண்பர்களுடன் தொடர்பு கொண்டார். மாக்சியக் கருத்துக்களை அவர்களிடம் பரப்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் உலகளாவிய ஒன்று. ஆதலால் இவ் எதிர்ப்பியக்கம் உலகளவில் அமைந்த இயக்கத்தோடு இணைவதன் அவசியத்தை உணரச் செய்தார். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளி வர்க்கம், அடக்கியொடுக்கப்பட்ட விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர் என்பதை உணர்த்தினார். இவ்வாறே கந்தையாவும் அவரது தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கான அத்திவாரத்தை இட்டனர். இவரது வாழ்வில் குறிப்பிடக்கூடிய அடுத்த கட்டம் 1947 இல் பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்றமை ஆகும். எத்தகைய தடங்களையும், சுகவீனத்தையும் வென்று 1956 இல் கட்சிக் கிளைகள் நிறுவப்பட்டு 9 ஆண்டுகள் பருத்தித்துறைப் பிரதிநிதியாகக் கந்தையா தேர்ந்தெடுக்கப்பட்டமை அன்னாரின் தலைசிறந்த பணிக்குச் சான்றாகும்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 38-40
  • நூலக எண்: 11850 பக்கங்கள் 68-69