ஆளுமை:கந்தையா, பரமசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமசாமி
தந்தை கந்தையா
தாய் சின்னம்மா
பிறப்பு 1937.05.15
ஊர் பூநகரி-ஆலங்கேணி
வகை பூசகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா பரமசாமி கிளிநொச்சி பூநகரியில் உள்ள ஆலங்கேணி - நல்லூரில் பிறந்தார்(1937.05.15). இவரது தந்தையாரின் பெயர் கந்தையா. இவரின் தந்தையார் ஆயுர்வேத வைத்தியராக இருந்தார். இவரது தாயின் பெயர் சின்னம்மா. இவர் நல்லுர் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து வரை கல்வி கற்றார். புலமைப்பரசில் பரீட்சையில் சித்தி பெற்றார். சிறுவயதில் தாயை இழந்தமையால் தொடர்ந்து கற்க முடியவில்லை. சிறு வயது முதல் சைவ சமயப்பற்றுடன் ஈடுபட்டு வந்தார். சிறு வயது முதல் பூசகருக்குத் தொண்டாற்றினார். ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேளாய் கண்ணகை அம்பாள் ஆலயத்தின் பூசகராக இருந்து வருகிறார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தையா,_பரமசாமி&oldid=570367" இருந்து மீள்விக்கப்பட்டது