ஆளுமை:கந்தசாமி, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1940.06.19
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, ஆறுமுகம் (1940.06.19 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். காலத்திற்கேற்ப பழமையுடன் புதுமையும் கலந்து சிற்பங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவராக விளங்கும் இவர், பறவைகள், மிருகங்கள், மற்றும் தெய்வீகம் பொருந்திய காமதேனு ஆகிய உற்சவ மூர்த்திகளைக் காவும் வாகனங்கள் போன்றனவற்றை நூற்று ஐம்பதுக்கும் மேலாக உருவாக்கியுள்ளார்.

சைவ ஆலயங்களுக்கு மட்டுமல்லாது கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் தன் சிற்பக்கலை வடிவங்கள் அமைந்த ரதங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார். இவரது படைப்புக்களாகப் பாஷையூர் அந்தோனியார் ஆலயம், நாவாந்துறை கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றின் ரதங்களையும், கோண்டாவில் காளியம்மன் ஆலய கைலாய வாகனம், கோண்டாவில் பழனியாண்டவர் ஆலய கைலாய வாகனம், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கைலாய வாகனம், இத்தாவில் முருகன் கோவில் ஆடிவேல் ரதம், நல்லூர் பாலகதிர்காம ஆடிவேல் ரதம் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.

இவரின் சிற்பக் கலைத்திறனைப் பாராட்டி 1994 ஆம் ஆண்டு நல்லூர் பாலகதிர்காம தேவஸ்தான சபை பொன்னாடை போர்த்திச் சிற்பக் கலாஜோதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. 2007 ஆம் ஆண்டு கொக்குவில் காளிகாம்பாள் தேவஸ்தானம் சிற்பக் கலாபூஷணம் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது .

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 204