ஆளுமை:ஐயாத்துரை, தம்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஐயாத்துரை
தந்தை தம்பு
பிறப்பு 1937.01.02
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயாத்துரை, தம்பு (1937.01.02 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை தம்பு. இவர் வி. வி. வைரமுத்து, அல்வாயூர் ச. தம்பிஐயா, அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா, கலாபூஷணம் வி. கே. இரத்தினம், மு. பொன்னையா ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றார்.

இவர் 1950 இல் இருந்து கோவலன், அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, சிலப்பதிகாரம், பவளக்கொடி, ஞானசௌந்தரி, ஶ்ரீவள்ளி, ஏழுபிள்ளை நல்லதங்காள், சாரங்கதாரா, பதவி மோகம், தூய உள்ளம், கன்னிக்கோட்டை, சகோதர விரோதி, முதல் இரவு, வாழ்க்கைப் போர், பண்டாரவன்னியன், சூழ்ச்சியின் வீழ்ச்சி, அனார்கலி, தர்மதேவன், இழந்தகாதல் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவரது ஆற்றலுக்காகக் கலாவிநோதன் அண்ணாச்சாமி அவர்கள் கலைஒளி என்ற பட்டம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 137
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஐயாத்துரை,_தம்பு&oldid=198155" இருந்து மீள்விக்கப்பட்டது