ஆளுமை:இராஜன், துரைராஜசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜன்
தந்தை துரைராஜசிங்கம்
பிறப்பு 1960.08.28
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜன், துரைராஜசிங்கம் (1960.08.28 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த மிருதங்க இசைக்கலைஞர். இவரது தந்தை துரைராஜசிங்கம். யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் குடிசார் கற்கைநெறியை முடித்து தொழில்நுட்ப உத்தியோகத்தராகக் கடமை புரிந்துள்ளதுடன் 30 வருட காலங்கள் மிருதங்கம் இசைத்து வந்துள்ளார். மிருதங்கக் கலையை முன்னாள் நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சுவாமிகள், எஸ். ஏ. இராமநாதன், எஸ். மகேந்திரன் போன்றோரிடமும் புல்லாங்குழல் வாசிப்பதை நமசிவாயம், பிரம்மஶ்ரீ சர்வேஸ்வர சர்மா ஆகியோரிடமும் கற்றார்.

இவர் முன்னாள் நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சுவாமிகள், நித்தியானந்த சர்மா ஆகியோரது இசைச் சொற்பொழிவிற்கு மிருதங்கம் வாசித்துள்ளதோடு, புல்லாங்குழல் தனிக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். ராஜன்ஸ் இசைக்குழுவில் பின்னணி இசை வழங்கியதோடு பல மிருதங்கம் பயிற்றுவித்துமுள்ளார். இவரது கலை ஆளுமையைக் கெளரவித்து மிருதங்க கலாவித்தகர் பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 101