ஆளுமை:புஷ்பராசா, சண்முகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:07, 21 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புஷ்பராசா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஷ்பராசா, சண்முகம்
தந்தை சண்முகம்
பிறப்பு 1950.04.12
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. புஷ்பராசா (1950.04.12 - ) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சண்முகம். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இவர் இடை நிலைக் கல்வியை யழ்ப்பாணம் வசாவிளான் மத்திய வித்தியாலயத்தில் கற்றார்.

நாடகம், நாடக எழுத்துருவாக்கம், நெறியாள்கை, சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவரான இக் கலைஞர் இளம் பராயத்தில் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பும் தன் போன்றவர்கள் சமூகத்தில் அடையும் துன்ப துயரங்களை சமூகத்தின் முன் காட்ட வேண்டும் என்ற இலட்சிய நோக்கமும் இவரைச் சிறுகதை நாடக எழுத்தாளனாக முன்வர உந்து சக்தியாக இருந்தது.

இவர் சகுந்தலை, திருமாவளவன், கொஞ்சும் குமரி, கண்ணாடி, தலைத் தீபவளி, வசந்த வாழ்வு, தொடர்ந்த கதை முடிவதில்லை, புன்னகையின் புயல், நிமிடங்கள் நினைக்கின்றன போன்ற நாடகங்களை எழுதியதோடு நடித்தும் நெறியாள்கை செய்துமுள்ளார். இவற்றில் பயணங்கள் முடிவதில்லை என்னும் நாடகம் பலமுறை பலரின் வேண்டுகோளை ஏற்று மேடையேற்றப்பட்டதோடு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

வளங்கள்

{{வளம்|7571|174}