ஆளுமை:பசுபதிப்பிள்ளை, நா. க.

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:55, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பசுபதிப்பிள்ளை
பிறப்பு 1902
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பசுபதிப்பிள்ளை, நா. க. (1902 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவர் இராசையர் என்று அறியப்படுபவர். இவர் தனது சிறிய தந்தை நா.சுப்பிரமணியத்தின் வழிகாட்டலில் வியாபாரத்தை ஆரம்பித்துத் தனது முயற்சியினால் நுவரேலியாவிலுள்ள ஹற்றன் நகரில் ஒரு கடையையும் டிக்கோயாவில் மூன்று கடைகளையும் வாங்கித் தனது உறவினர்களைக்கொண்டே நடாத்தினார். ஹற்றன், டிக்கோயா வாழ் மக்கள் இவர்களை 'N.K.P.சகோதரர்கள்' என்றே அழைத்தனர். வர்த்தகத்தில் சிறப்புற்று விளங்கிய இவர், சமுதாயத்திலும் அக்கறை கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் இறைபணிகளோடு கல்விப்பணிகளையும் ஆற்றியுள்ளார். இவர் வேலணை மத்திய கல்லூரி (முன்னர் சேர் வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என அழைக்கப்பட்டது) ஆரம்பிக்கப்படுவதில் முன்னின்று உழைத்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 433-434