ஆளுமை:நல்லதம்பி, வீ. வ.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:36, 4 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நல்லதம்பி |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நல்லதம்பி, வீ. வ. யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். 1973ஆம் ஆண்டு புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபராகவும் கடமையாற்றினார். 1954 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட கிராமாட்சி மன்ற சமாசத் தலைவராக பணியாற்றினார். இவர் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்கின்ற வேளை சைவநீதி எனும் மலரை வெளியீடு செய்தார்.
1977ஆம் ஆண்டு ஸ்காபரோ கலாசார விருது விழாவில் இலக்கியத்திற்கான விருதினைப் பெற்று கொண்டார். இதுவே கனடா நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் பெற்ற முதல் விருதாக கருதப்படுகின்றது. 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மொரிசியசில் நடைப்பெற்ற எட்டாவது உலக சைவ மகாநாட்டில் இவரின் சைவ தமிழ் தொண்டுகளைப் பாராட்டிச் 'சைவ சித்தாந்தக் கலாநிதி' எனும் சிறப்பு பட்டத்தை உலக சைவ பேரவை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 185-186
- நூலக எண்: 10145 பக்கங்கள் 89