ஆளுமை:நல்லதம்பி, வீ. வ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நல்லதம்பி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நல்லதம்பி, வீ. வ.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீ.வ.நல்லதம்பி அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். 1954 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட கிராமாட்சி மன்ற சமாசத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு கிராம அபிவிருத்தி பணிகளை இவர் திறம்படச் செய்ததோடு 1973ஆம் ஆண்டு புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபராக கடமையாற்றினார்.

இவர் கல்விப்பணி, சமூகசேவைப்பணி, பொதுப்பணி, தமிழ் சைவப்பணி போன்றவற்றை தனது உயிர் மூச்சு உள்ளவரையும் செய்தார். இறுதியாகப் புலம்பெயர்ந்து கனடா நாட்டிலும் 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' எனும் நோக்கில் தான் கற்றறிந்த தமிழை உலகறியச் செய்த உத்தமர் ஆவார். கனடா நாட்டில் சைவநீதி எனும் மலரை வெளியிட்டார்.

1977ஆம் ஆண்டு ஸ்காபரோ கலாசார விருது விழாவில் இலக்கியத்திற்கான விருதினைப் பெற்று கொண்டார். இதுவே கனடா நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் பெற்ற முதல் விருது ஆகும். மற்றும் 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மொரிசியசில் நடைப்பெற்ற எட்டாவது உலக சைவ மகாநாட்டில் அவரின் சைவ தமிழ் தொண்டுகளைப் பாராட்டிச் 'சைவ சித்தாந்தக் கலாநிதி' எனும் சிறப்பு பட்டத்தை உலக சைவ பேரவை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 185-186
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நல்லதம்பி,_வீ._வ.&oldid=157273" இருந்து மீள்விக்கப்பட்டது