ஆளுமை:சிவசரவணபவன், சுப்பிரமணியஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசரவணபவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசரவணபவன்
தந்தை சிவசுப்பிரமணியஐயர்
பிறப்பு 1938.02.28
ஊர் கரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவசரவணபவன், சிவசுப்பிரமணியஐயர் (1938.02.28 - ) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1952ஆம் ஆண்டுகளிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத்தொடங்கிய இவர் சிற்பி, யாழ்வாசி போன்ற புனைப்பெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.

இவர் நிலவும் நினைவும், சத்திய தரிசனம், நினைவுகள் மடிவதில்லை ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் உனக்காக கண்ணே என்ற நாவலையும் எழுதியுள்ளார். அத்தோடு பன்னிரு சிறுகதைகள் உள்ளடங்கிய ஒரு தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். கலைச்செல்வி பத்திரிகையின் ஆசிரியராகவும், லண்டன் சுடரொளி பத்திரிகையின் கௌரவ ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்ட கலாசாரப் பேரவை இலக்கிய குழுத் தலைவர், இலங்கை சாகித்திய மண்டலம், அரசாங்க இலவச பாடப்புத்தக எழுத்தாளர் குழு, யாழ்ப்பாண இலக்கிய வட்டம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இவர் கடமைபுரிந்துள்ளார்.

ஞான ஏந்தல், கலைச்சுடர் ஆகிய பட்டங்களைப் பெர்றிருக்கும் இவருக்கு 2002இல் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருதும், கொழும்பு கம்பன் கழக இலக்கியச் சேவைக்காக கௌரவ விருதும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 18