ஆளுமை:சந்திரிக்கா, கணேஸ்பரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரிக்கா கணேஸ்பரன்
தந்தை கணேஸ்பரன்
பிறப்பு 1964.11.21
ஊர் மானிப்பாய்
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரிக்கா கணேஸ்பரன் (1964.11.21 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவர் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் மானிப்பாய் விவேகானந்தா வித்தியாசாலையிலும் மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையிலும் பயின்றதோடு தந்தையாகிய ரி. கணேஸ்பரனிடமும் வி. சுப்ரமணியம், ஐயாக்கண்ணு தேசிகர், எஸ். கணபதிபிள்ளைப்பிள்ளை போன்றோரிடமும் இசைக்கலையைப் பயின்றார்.

1979இல் இருந்து கச்சேரிகளை நிகழ்த்தியும் திருமுறைகளை இனிமையாகப் பாடியும் பாராட்டுப் பெற்றவர். இவர் 'பண்ணிசைத் தேன்துளிகள்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். இவரது கலை ஆற்றலையும் கலைச்சேவையையும் பாராட்டி இசைக்கலைமணி, பண்ணிசைக்கலாவித்தகர், சங்கீதவித்தகர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 59