ஆளுமை:சண்முகநாதன், பொன்னையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:37, 25 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகநாதன்
தந்தை பொன்னையா
பிறப்பு 1939.02.02
ஊர் சங்குவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், பொன்னையா (1939.02.02 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா. இவர் கந்தரோடை பாடசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்றார்.

எழுத்துத்துறையில் நாற்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட இவர், அங்கிள் என்ற புனைபெயரில் பொதுக்கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், நகைச்சுவை கட்டுரைகள், புனைகதைகள், வானொலி நிகழ்ச்சிகள் எழுதியுள்ளார். இவர் கிட்டத்தட்ட ஏழு நூல்களை வெளியிட்டுள்ளதுடன் கொழும்புப்பெண், பெண்ணே நீ பெரியவள்தான் போன்ற நகைச்சுவை கட்டுரைகளையும் வெள்ளரி வண்டி (சிறுகதை) இதே ஒரு நாடகம் (குறுநாடகம்) வெளிடுட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் சிறந்த பத்தி எழுத்தாளர் விருதும் 2008 ஆம் ஆண்டில் ஞானஏந்தல், கலாபூஷணம் விருதுகளும் இவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 14
  • நூலக எண்: 8714 பக்கங்கள் 03-04