ஆளுமை:குமாரவேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரவேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை
தந்தை பொன்னம்பலபிள்ளை
பிறப்பு
ஊர் மண்டைதீவு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலப்பிள்ளை குமாரவேற்பிள்ளை அவர்கள் மண்டைதீவை பிறப்பிடமாகக் கொண்ட புலவர் ஆவார். இந்தியா சென்று தமிழ் வல்லபெரும் புலவர்களிடம் பாடங்கேட்டு புலமையும் வித்துவப்பட்டமும் பெற்று பின் தாய்நாட்டிற்கு திரும்பிய இவர் 1937ஆம் ஆண்டு மண்டைதீவிலிருந்து அமுதசுரபி என்ற திங்களிதழ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.

இவர் ஈழகேசரி வார இதழில் மந்திரவாதியின் மகன் எனும் தொடர் நாவலினை எழுதி புகழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் வித்துவான் கணேசையரிடம் பயின்றுள்ளார். இவரது புகழினை புனைந்த கவிதையொன்று 1971ஆம் ஆண்டு தாய்க் கவிதை எனும் தொகுதியில் வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 09-10