ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா

From நூலகம்
Name கலைவாணி, ஏகானந்தராஜா
Pages கந்தையா
Pages சரஸ்வதி
Birth 1951
Place நல்லூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலைவாணி, ஏகானந்தராஜா (1951 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா; தாய் சரஸ்வதி. தனது கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்ற இவர், வட இலங்கை சங்கீத சபை நடத்தும் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் வரை பங்குபற்றித் தேறி சுன்னாகம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் இசைக் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் தனது முதலாவது அரங்கேற்றத்தை ஊரெழு பிள்ளையார் கோவில் மண்டபத்தில் 1977 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.

இவர் சங்கீத ஆசிரியராகத் திருகோணமலை பன்குளம் மகா வித்தியாலயத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் திருகோணமலையிலுள்ள கும்புறுப்பிட்டி மகா வித்தியாலயம், முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் கோண்டாவிலில் இசைத் தமிழ் மகா வித்தியாலயம், இராமகிருஸ்ண வித்தியாலயத்திலும் நல்லூர் மங்கையற்கரசி வித்த்தியாலயத்திலும் பணி புரிந்துள்ளார். பின்னர் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று, 1922 ஆம் ஆண்டு தொடக்கம்சப்தஸ்வரா இசைப் பாடசாலையைக் கேளின் நகரத்தில் நிறுவி நடாத்தி வருகின்றார். மேலும் இவர் இலண்டன் நுண்கலைக் கல்லூரியின் பரீட்சை மேற்பார்வையாளராகவும் ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் பரீட்சை மேற்பார்வையாளராகவும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் தான் எழுதிய பாடல்களையும் வேறு பலர் எழுதிய பாடல்களையும் இணைத்து இசையமைத்துப் பாடி நல்லையம்பதி பாமாலை, பெற்றாரே நம் தெய்வங்கள் என்ற இரு ஒலிப்பேழைகளை வெளியீடு செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 120-124
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 54-57