ஆளுமை:இரவி, அருணாசலம்

From நூலகம்
Name இரவி
Pages அருணாசலம்
Pages பரமேஸ்வரி
Birth
Place அளவெட்டி
Category ஆசிரியர்,கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரவி, அருணாசலம் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர், கலைஞர். இவரது தந்தை அருணாசலம்; தாய் பரமேஸ்வரி. அளவெட்டி சீனங்கலட்டி ஞானோதயா வித்தியாசாலை, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி (1987-1988), கிளிநொச்சி இந்துக் கல்லூரி (1989-1992), இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி (1992-1996) ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புதுசு சஞ்சிகை (1980-1987 ), கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகர் சஞ்சிகை (1991-1996), இலண்டனிலிருந்து வெளிவரும் புலம் சஞ்சிகை (1997-2001 ), ஒரு பேப்பர் சஞ்சிகை (2004 -) ஆகியவற்றின் ஆசிரியராக இருந்துள்ளார். அத்துடன் ஐ.பி.சி.தமிழ் வானொலி (1997-2001), தமிழ் தொலைக்காட்சி இணையம்-TTN (2001-2004), ஐ.பி.சி.தமிழ் வானொலி, தொலைக்காட்சி (2015- ) ஆகியவற்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரி, யாழ்.பல்கலைக்கழகக் கலாசாரக்குழு, கொழும்பு அரங்காடிகள், இலண்டன் அரங்கத்தாடிகள் ஆகிய நாடகக் குழுக்களுடன் இணைந்து பதினைந்து நாடகங்களுக்கு மேல் நெறியாள்கை செய்தும் நடித்தும் இருக்கின்றார். நூற்றுக்கு மேற்படட தடவை மேடை ஏறி உள்ளார். சினிமாவிலும் ஆர்வம் கொண்டவர்.

காலம் ஆகி வந்த கதை (நெடுங்கதை), பாலைகள் நூறு (சிறுகதைத் தொகுப்பு), 'வீடு நெடும் தூரம் (அரசியல் புதினம்), 'ஆயுதவரி' (குறுநாவல்கள்), '1958' (நெடுங்கதை) ஆகியன இவரது நூல்கள்.