ஆளுமை:அரியரெத்தினம், சந்தியாப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:59, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அரியரெத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியரெத்தினம்,ச. (வாகரைவாணன்)
தந்தை சந்தியாப்பிள்ளை
தாய் சந்தனம்
பிறப்பு 1944.12.22
ஊர் வாகரை, மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. அரியரெத்தினம் மட்டக்களப்பு வாகரையில் சந்தியாப்பிள்ளை, சந்தனம் தம்பதியரின் மகனாக 1944 டிசம்பர், 22ல் பிறந்த எழுத்தாளர் ஆவார். வாகரைவாணன் எனும் புனை பெயர் கொண்ட அரியரெத்தினம் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல்கள் முதலான படைப்புக்களை ஆக்கியுள்ளார்.

வாகரை தமிழ் பாடசாலை, சென்மேரிஸ் பாடசாலை, சிவானந்தா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்ற இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றவராவார். சுதந்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றியவர் உதய சூரியன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சுட்டபொன், பயணம், துரோணர் வதம், எண்ணத்தில் நீந்துகிறேன், தமிழ்ப் பாவை, கடற்கரைப் பூக்கள், இனிக்குந் தமிழ், கிறிஸ்தவ தத்துவம் முதலான பல்வேறு படைப்புக்களை ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 144