ஆளுமை:தங்கவடிவேல், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:38, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தங்கவடிவேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கவடிவேல்
தந்தை குமாரசாமி
பிறப்பு 1944.02.03
ஊர் கோப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கவடிவேல், குமாரசாமி (1944.02.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை குமாரசாமி. இவர் ஆரம்பக் கல்வியை நல்லூர் சாதனாப் பாடசாலையிலும், பின் உயர் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும் கற்றார்.

இவர் தனது 22ஆவது வயதில் ஏன் பிறந்தேன் எனும் நாடகத்தினையும், மகளே என்னை மன்னித்துவிடு, உலகம் போற போக்கிலே, மலராத மொட்டுக்கள், பெண்களின் வாழ்வு மலருமா, சொக்கன், ஆண்டி பெற்ற அமரன் போன்ற மேடை நாடகங்களையும் ஜோர்ஜ் சந்திரசேகர், அப்துல் கமீத், பி. பி. சி. ஆனந்தி, சுப்புலட்சுமி, காசிநாதர், லடிஸ் வீரமணி போன்றோர்களுடன் இணைந்து இடி மின்னல் மழை, தவறுகள் போன்ற வானொலி நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் பெண்களின் வாழ்வு மலர்வது எப்போது என்ற கவிதையையும், ஆசையற்றவர் இல்லையடா அதனால் படும் தொல்லையடா அர்த்தமற்ற ஆசையாலே அடைவது முடிவிலே துன்பமடா எனும் பாடலையும் இவர் இயற்றியுள்ளார்.

இவரது திறமைக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 176