ஆளுமை:சிறிஜீவகன், பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:16, 28 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:சிறிஜீவகன், பொ., ஆளுமை:சிறிஜீவகன், பொன்னுத்துரை என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிறிஜீவகன்
தந்தை பொன்னனுத்துரை
தாய் இராசமணி
பிறப்பு 1957.10.08
ஊர் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிறீஜீவகன், பொன்னுத்துரை (1957.10.08 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னுத்துரை; தாய் இராசமணி. இவர் தனது ஆரம்பக் கல்வியை பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை உடுவில் தமிழ்க் கலவன் (மான்ஸ்) கல்லூரியிலும், அச்சுவேலி சிறீபஸி வித்தியாலயத்திலும் கற்றார். பின் கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பு வரை யாழ்ப்பாணம் வாசவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும், கல்விப் பொதுத்தாராதர உயர்தரத்தினை யாழ்ப்பாணம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் கற்றார். உயர்தர வகுப்பில் சித்தியடைந்த இவர், வெளிவாரிக் கலைமானிப் பட்டப் படிப்பை இரண்டாம் வருடம் வரை தொடர்ந்தார்.

தனது சொந்தப் படிப்புடன் மல்லாகம் சித்தி விநாயகர் கல்வி நிலையத்தை திரு. சத்தியமூர்த்தி அவர்களிடமிருந்து பொறுப்பேற்றுச் சொந்தமாக நடத்தினார். பின்னர் புலம் பெயந்து ஜேர்மனிக்கு சென்றார். ஜேர்மனியிலும் காமன் தமிழர் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக இருந்து செயற்பட்ட இவர் இலங்கையில் நடக்கும் இனப்பிரசினைகள் பற்றிய விவரங்களை பத்திரிகைகள், நாடாக்கள் மூலம் எடுத்து அந் நாட்டு மக்களுக்கு காண்பித்து விளக்கம் செய்தார். மேலும் 1985ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் பாரதி தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்து அதன் ஆசிரியராக கடமையாற்றினார். 1986ஆம் ஆண்டு மக்கள் குரல் என்ற பெயருடன் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டு நடத்தினார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 115-119
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 29-36