ஆளுமை:சிவகுருநாதன், இரத்தினதுரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுருநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுருநாதன், இரத்தினதுரை
தந்தை இரத்திந்துரை
பிறப்பு 19331.10.07
இறப்பு 2003.08.08
ஊர் கந்தர்மடம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுருநாதன் இரத்தினதுரை (1931.10.07 - 2003.08.08) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஊடகவியலாளர். இவர் யாழ்.இந்துக் கல்லூரியில் கற்று பின் மேற்படிப்புக்காகவும், தொழில் காரணமாகவும் கொழும்பில் பல காலம் வாழ்ந்தவர். 1955ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாராளுமன்ற நிருபரக பணியாற்றி பாராளுமன்ற நிகழ்வுகளை பத்திரிகை மூலம் கொண்டு வர வழிவகுத்தார்.

1961ஆம் ஆண்டு முதல் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணிபுரிந்த இவருக்கு இலங்கையின் தேசியமட்டப் புதினத்தாள் வரலாற்றில் 33 வருடங்கள் பிரதம ஆசிரியராகப் இருந்த பெருமை உண்டு. பின்னர் இலங்கை நீதி அமைச்சினால் இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக நியமனம் பெற்றார். சிறந்த பத்திரிகையாளன் சேவைக்கான விருது, சமூக மாமதி, தமிழ்மணி ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றுக் கொண்ட இவர் தமிழ் மக்களினால் செய்தி மன்னன் என அன்பாக அழைக்கப்பட்டார். இவர் இலங்கை அரசின் அதிவிசேட விருதான கலாசூரி விருதினையும் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 17