பகுப்பு:போது

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

போது இதழானது 1998 தொடக்கம் மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு வெளியான இருமாத இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக பெயர் பெற்ற கவிஞர் வாகரை வாணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை PROFESSINAL PYSHOLOGICAL COUNSELLING CENTRE வெளியீடு செய்துள்ளது. "போது" என்பது தாவர இயலில் மொட்டுக்கும் பூவுக்கும் இடையில் உள்ள பருவத்தைக் காட்டுவது போல உளவியல் ரீதியில் குழந்தைப் பருவத்திற்கும் குமருப்பருவத்திற்கும் இடையில் அமையும் பிள்ளைப்பருவத்தினரை நோக்காகக் கொண்டு வெளியிடப்பட்ட இதழாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கலை, இலக்கிய, சமூக, அறிவியல், ஆன்மீக விடயக்கருத்துக்கள் காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:போது&oldid=493384" இருந்து மீள்விக்கப்பட்டது