பகுப்பு:தேன்மொழி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1955 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாக தேன்மொழி காணப்படுகின்றது. இது திங்கள் வெளியீடாக வந்துள்ளது. இதன் நிர்வாக ஆசிரியராக தி.ச.வரதராசன் அவர்களும், இணையாசிரியராக மஹாகவி அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவுச் சின்னமானது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியீடு செய்துள்ளது. அக்கால கட்டத்தின் தமிழ்ப் போக்கிற்கு இணங்க இதன் உள்ளடக்கங்கள் தூய கடுந்தமிழில் காணப்படுகின்றன. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், பா நாடகங்கள், கவிஞர் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"தேன்மொழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தேன்மொழி&oldid=493708" இருந்து மீள்விக்கப்பட்டது