ஆளுமை:ஸ்ரீகந்தராசா, சு.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீகந்தராசா
பிறப்பு 1953.10.01
ஊர் களுவாஞ்சிக்குடி
வகை கலைஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீகந்தராசா, சு. (1953.10.01 - ) மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவர் அவுஸ்திரேலியத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராகவும் விற்றல்ஸீ தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றியதுடன் சிலவற்றில் முக்கிய பாத்திரம் ஏற்றும் நடித்துள்ளார். இவர் பாடுமீன் ஶ்ரீகந்தராசா, மட்டுநகர் ஶ்ரீ, திருமுருகராசன், செந்தமிழ்ச்செல்வர், சு. ஶ்ரீகந்தராசா ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், பாடல்கள், கவிதைகள், வில்லுப்பாட்டு ஆகியவற்றை எழுதியும் நாடகங்களில் நடித்துமுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் முத்தமிழ் விழாவையும் மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும் சர்வதேச இலக்கியப் போட்டிகளையும் பத்து வருடங்களுக்கு மேலாக நடத்திய இவர், அங்கே முதன் முதலாகத் தனித் தமிழ் இசை விழாவையும் தமிழ் நடன விழாவையும் நடத்தி வருகின்றார். இவர் தமிழ் இன்பம், சுந்தரத் தமிழ் ஆகிய தலைப்புக்களில் அவுஸ்திரேலியத் தமிழ் வானொலியில் உரையாற்றினார். இவர் இலங்கையில் சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர், சிறந்த நாடக எழுத்தாளர், செந்தமிழ்ச் செல்வர் ஆகிய விருதுகளைப் பெற்றதோடு அவுஸ்திரேலியாவில் விக்ரோறியா மாநில அரசினால் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுப் பல்லினக் கலாச்சார அமைச்சரினால் செந்தமிழ்ச் செல்வன் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4695 பக்கங்கள் 07
  • நூலக எண்: 1858 பக்கங்கள் 66-73

வெளி இணைப்புக்கள்