ஆளுமை:விமலநாதன், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விமலநாதன்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு 1964.10.24
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விமலநாதன், நாகலிங்கம் (1964.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர், இசைக் கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை நாகலிங்கம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துப் பின்னர் பட்டதாரியான இவர், இக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் 1988 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத் தமிழ் மன்றம் நடத்திய காத்தவராயன் கதைவழிக்கூத்து நாடகத்தில் நடித்ததிலிருந்து கலைச் செயற்பாட்டில் ஆர்வம் காட்டி வரலனார்.

இவர் நாடகம் சார்ந்த நுண்கலை, அதன் செயற்றிறன், அரங்கச் செயற்பாடுகள் ஆகியவற்றைக் கற்று வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் ஆசிரியர் தராதரப்பத்திரம் பெற்றுள்ளார். இவர் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தில் இணைந்து அக்கழகத்தின் கலை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றார். அக்கழகம் வெளியிட்ட இசை நாடகம், காத்தான் சிந்து நடைக் கூத்துப் பாடல்கள் கொண்ட இறுவெட்டுக்களில் பாடி, தன் இசைப் புலமையையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் இக்கழகம் வெளியிட்ட மரபு வழி இசை நாடகங்கள் என்னும் நூலின் துணைப் பதிப்பாசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிவரும் ஶ்ரீ பாஸ்கர் இசைக்குழுவின் பாடகராக விளங்கும் இவர், வில்லிசையில் பக்கப்பாட்டுக் கலைஞராகவும் விளங்குகின்றார். இவர் சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் சாவித்திரியாக, சத்தியவானாக, நாரதராகப் பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 182