ஆளுமை:வரதராஜன், மாணிக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராஜன்
தந்தை மாணிக்கம்
பிறப்பு
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராஜன், மாணிக்கம் கல்முனை, பாண்டிருப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மாணிக்கம். இவர் சிங்கர் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

தனது 17 ஆவது வயதில் காலரதம் என்ற சிற்றிதழை மீலாத்கீரனுடன் இணைந்து நடாத்திய இவர், அன்டனி பால்ராஜ் என்ற புனைபெயரில் களம் என்ற சிற்றிதழின் இணை ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் நான்கு இதழ்கள் மட்டும் வெளிவந்த வியூகம் இதழையும் ஆரம்பித்தார். இவர் மூன்றாம் சிலுவை (முதல் நாவல், காலச்சுவடு பதிப்பக வெளியீடு), உள்மன யாத்திரை (பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவரது உள்மன யாத்திரை என்ற நூலுக்கு இலங்கை வடக்கு - கிழக்கு மாகாணசபை விருதைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13389 பக்கங்கள் 193-196