ஆளுமை:முருகையா, சங்கரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகையா
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1951.07.16
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகையா, சங்கரப்பிள்ளை (1951.07.26 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் தவிற் கலையைத் தனது தந்தையிடமும் சின்னராசாவிடமும் பயின்றார்.

யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களில் தவில் வாசித்துச் சிறப்புப் பெற்ற இவர், தனது தவிற் சேவையை அளவெட்டி பத்மநாதன், சாவகச்சேரி பஞ்சாபிகேஷன், மூளாய் பாலகிருஷ்ணன், இணுவில் கோவிந்தசாமி மற்றும் பிச்சையப்பா போன்றோருடைய குழுவினருடன் இணைந்து சேவையாற்றியுள்ளார். இவரது கலைச்சேவைக்காகப் பல நிறுவனங்கள் கௌரவப்படுத்தியதோடு கலாசுரபி என்னும் பட்டமும் வழங்கியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 100