ஆளுமை:முத்துராச கவிராயர், செந்தியப்பன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துராச கவிராயர்
தந்தை செந்தியப்பன்
பிறப்பு
ஊர் உறையூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துராச கவிராயர், செந்தியப்பன் சோழநாட்டிலுள்ள உறையூரைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். இவரது தந்தை செந்தியப்பன். இவரால் யாழ்ப்பாண வரலாற்றைக் கூறுகின்ற கைலாய மாலை என்னும் நூல் கலிவெண்பாவால் இயற்றப்பட்டதாகும். இந்நூலானது முதலியார் செ. இராசநாயகம் எழுதிய ஆராய்ச்சி முன்னுரையுடனும் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் மொழிபெயர்ப்புடனும் 1939 ஆம் ஆண்டு செ.வே. ஜம்புலிங்கம் பிள்ளையால் வெளியிடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 73
  • நூலக எண்: 963 பக்கங்கள் 186-187


வெளி இணைப்புக்கள்