ஆளுமை:மாதுசிரோண்மணி வேலாயுதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாதுசிரோண்மணி, வேலாயுதர்
பிறப்பு 1942.12.02
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதுசிரோண்மணி, வேலாயுதர் (1942.12.02 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் கர்நாடக சங்கீதத்தைத் தனது ஏழாவது வயதில் செல்வி முத்துலட்சுமி குழந்தைவேலுவிடமும் மாத்தளையில் திரு. என். ராஜுவிடம் ஏழு ஆண்டுகளும் முறையாகக் கற்றுத் தனது உயர் கல்வியை 1958 இல் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றார்.

1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் இசை ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர், 1978 - 1979 வரை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விசேட இசைப் பயிற்சி பெற்று 1980 ஆம் ஆண்டு வவுனியா மகா வித்தியாலயத்திலும் 1985 - 2002 வரை யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். மேலும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய பரீட்சையில் சித்தி அடைந்ததுடன் ரசிக ரஞ்சன சபா, அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், ரஞ்ஜன சபா, தமிழிசை மன்றம் போன்றவற்றில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு இவரது கலைச்சேவையைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் சங்கீத பூஷணம் என்ற பட்டமும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 77