ஆளுமை:பாலசுந்தரம், கதிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுந்தரம்
தந்தை கதிர்
பிறப்பு
ஊர் ஆவரங்கால்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுந்தரம், கதிர் யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிர். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரியான இவர், இலண்டன் பல்கலைக்கழக இடைக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இவர் இலங்கையின் பல்வேறு பாகங்களில் தொழில் புரிந்ததுடன் 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்.

இவர் பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் பின்னர் சிறுகதைப் படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். Saturday Review என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த அரசாங்கப் பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டவர். இவரது படைப்புகள் ஆரம்பத்தில் சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின. இவரது சிறுகதைகளில் 'மனித தெய்வம்', 'முட்டைப் பொரியலும் முழங்கையும்' ஆகியன குறிப்பிடத்தக்கன. இவர் நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு என பல்துறையிலும் தடம் பதித்தவர். இவர் எழுதி நெறிப்படுத்திய நாடகங்களில் 'விஞ்ஞானி என்ன கடவுளா?, 'சாம்பல் மேடு', 'விழிப்பு', என்பவை வித்தியாசமான சமூகப்பார்வை கொண்டவை. ஆங்கில மொழியிலும் எழுதியுள்ள இவர் 'அந்நிய விருந்தாளி' சிறுகதைத் தொகுப்பு, 'மறைவில் ஐந்து முகங்கள்', 'கனடாவில் ஒரு நவீன சாவித்திரி', 'சிவப்பு நரி' நாவல்கள், 'அமிர்தலிங்கம் சகாப்தம்', 'சாணக்கியன்' வாழ்க்கைச் சரிதைகள், 'சத்தியங்களின் சாட்சியம்' ஆய்வு நூல் மற்றும் The Five Hidden Face', 'His Royal Highness, The Tamil Tiger' என்ற ஆங்கில நாவல்களையும் படைத்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 14706 பக்கங்கள் 3-4