ஆளுமை:பத்மநாதன், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மநாதன்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1931.09.19
இறப்பு 2003.07.15
ஊர் அளவெட்டி
வகை நாதஸ்வர கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மநாதன், கந்தசாமி (1931.09.19 - 2003.07.15) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் தனது ஏழாவது வயதினில் இசைத்துறைக்குள் நுழைந்து இறுதிவரை இசையோடு பயணித்தவர்.

இவர் யாழ்ப்பாணம், பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதனால் 'நாதஸ்வரக் கலாநிதி' பட்டம் பெற்றதுடன் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு 1982 இல் இலங்கையின் கலைஞர்களுக்கான உயர் விருதான 'கலாசூரி' விருது அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவால் வழங்கப்பட்டது. அத்துடன் இவருக்கு வட-கிழக்கு மாகாண ஆளுனர் விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவின் பின்பு 2003 இல் யாழ்.பல்கலைக்கழகம் 'கலாநிதிப்' பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 49-551
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 158-161
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 90-91