ஆளுமை:பண்ணாமத்துக் கவிராயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பண்ணாமத்துக் கவிராயர்
பிறப்பு 1940.01.01
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பண்ணாமத்துக் கவிராயர் (1940.01.01 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாளர், மொழிபெயர்ப்பாளர். இவரது இயற்பெயர் ஸய்யத் முஹமத் ஃபாரூக் என்பதாகும். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையில் பல பாடசாலைகளில் பணிபுரிந்த இவர், 1960 ஆம் ஆண்டு முதல் ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளார்.

இவரது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் தாரகை, மலர், பாவை, அக்னி, அலை போன்ற சஞ்சிகைகளிலும் இன்ஸான், செய்தி, தினகரன், வீரகேசரி, திசை, அஷ்ஷூரா போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேலும் இவரது ஆங்கிலம் மீதான புலமை காரணமாக அல்லாமா இக்பால், நஸ்ரூல் இஸ்லாம், ஃபைஸ் அஹமத் ஃபைஸ் முதலான கவிஞர்களினது கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு 'காற்றின் மௌனம்' என்னும் கவிதை மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 104-107