ஆளுமை:பஞ்சாச்சரம், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாச்சரம்
தந்தை சின்னத்தம்பி
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு 1965.11.21
இறப்பு -
ஊர் குஞ்சன்குளம், மாங்கேணி, மட்டக்களப்பு
வகை கோயில் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சின்னத்தம்பி பஞ்சாச்சரம் (1965.11.21) இவர் மட்டக்களப்பு கிண்ணையடியை கிராமத்தினை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, மாங்கேணி , குஞ்சன்குளம் எனும் கிராமத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவர் இவரது தந்தை சின்னத்தம்பி;தாய் வள்ளிப்பிள்ளை. இவரது மனைவி பசுபதி. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனது ஆரம்ப காலம் முதலே இவர் பள்ளிப்படிப்பை அறியாதவர். தற்போது தான் வசிக்கும் குஞ்சன்குளம் கிராமத்தின் வராகி அம்மன் கோயிலின் நிர்வாகக் கட்டமைப்பில் தலைவராகக் காணப்படுகிறார். அத்துடன் குஞ்சன்குளம் கிராமத்தின் வழிபாடு, கல்வி, சமூக முன்னெடுப்புக்கள் முதலான சகல விடயங்களிலும் தன்முனைப்புடன் செயற்படக்கூடிய ஒருவராகவும் இவர் காணப்படுகிறார். தமது வழிபாடுகள் வனங்களில் இருந்து எவ்வாறு கிராமங்களை நோக்கி நகர்ந்தது, அதற்கான காரணங்கள் , நவீன சிந்தனையானது தமது மரபில் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் முதலானவற்றையும் நன்கறிந்து கொண்ட ஒரு சமூக சேவையாளர் ஆவார்.