ஆளுமை:நாகரெத்தினம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகரெத்தினம்)
தந்தை வேலுப்பிள்ளை
தாய் வெள்ளச்சி
பிறப்பு தெரியாது
இறப்பு -
ஊர் பாலர்சேனை, வேப்பவெட்டுவான், கரடியனாறு மட்டக்களப்பு
வகை வேட்டையர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேலுப்பிள்ளை நாகரெத்தினம் (தெரியாது) இவர் பாலர்சேனை, வேப்பவெட்டுவான், கரடியனாறு மட்டக்களப்பைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த கைதேர்ந்த வேட்டையர் ஆவார். இவரது பிறந்த ஊர் களுவன்கேணி. இவரது தந்தை வேலுப்பிள்ளை;தாய் வெள்ளச்சி. இவரது மனைவியின் பெயர் சிவனேசம். இவருக்கு பதினொரு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை சற்றும் அறியாதவர். தனது இளம்பராயத்தில் இருந்தே காடு வெட்டிச் சேனைப்பயிற்செய்கை செய்வதிலும், வேட்டையாடுவதிலும், தேனெடுத்தலிலும் சிறந்து விளங்குகின்றார். இவரின் உடலினுடைய கட்டுக்கோப்பினாலும், ஆரோக்கியத்தினாலும் ஊரவர்களினால் “வைரன்” என்றே அழைக்கப்படுகின்றார். “தான் இப்போது வசிக்கும் கிராமம் கூட இவரின் இளம்பராயத்தில் காடு வெட்டி உருவாக்கப்பட்டதாகவும், அதில் தனக்குப் பெரும் பங்குண்டு” என இவர் குறிப்பிட்டமையும் இங்கு சொல்லத்தக்கதாகும்.